Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல சிறப்புகளை பெற்ற இக்கோயிலில் காலை 11மணிக்கு சிறப்பு சுதர்சன ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு திருக்கோவில் வளாகத்திலுள்ள அமிர்த புஷ்கரணி தீர்த்த குளத்தில் ஶ்ரீவிஜயவல்லி, ஶ்ரீ சுதர்சனவல்லித் தாயார் சமேத ஶ்ரீ சக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி சுழலும் ஶ்ரீ சுதர்சன சக்கரத்துடன் கூடிய நூதன தெப்பத்தில் மின் ஒளி அலங்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் சுதர்சன பக்தர்கள் செய்திருந்தனர்.